Tuesday, November 9, 2010

கோவை கொலைகள்

Coimbatore twin murderCoimbatore Children Murderஇது போன்ற கொடுமைகளுக்கு என்ன தீர்வு ..... சமுதாயமும் மீண்டும் கூட்டு குடும்பம் என்ற முறையும் வளரவேண்டும்...

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் ஜெயின். இவரது மகள் முஷ்கின் (11), அவளது தம்பி ரித்திக் ஜெயின் (8). இருவரையும் காரில் கடத்திச்சென்று சிறுமியைக் கற்பழித்து பின்னர் இருவரையும் பி.ஏ.பி. கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்ததாக மோகனகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் விசாரணைக்காக இருவரையும், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நான்கு நாள் அனுமதி கேட்டு வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி 5வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவர்களுடன் செல்ல விருப்பமா என கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர். மேலும், இவ்வழக்கில் மேலும் இரு டிரைவர்கள் எங்களுடன் இருந்தனர் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து 3 நாள் காவலில் அவர்களை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், விசாரணை முடிவடைந்து நவம்பர் 11ம் தேதி இருவரையும் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை இருவரையும் செட்டிக்குளம் பகுதிக்கு முதலில் போலீஸார் அழைத்துச் சென்றனர். போத்தனூர் பகுதியில் வேன் போய்க் கொண்டிருந்தபோது, அங்குள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வந்த போது, மோகனகிருஷ்ணன் திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீசாரை சுட்டு மிரட்டியுள்ளான். மேலும் கேரளாவுக்கு வண்டியைத் திருப்புமாறும் கூறியதாகவும் தெரிகிறது.

அப்போது அவனை மடக்க முயன்ற போலீசாரை அவன் துப்பாக்கியால் சுட்டான். இதில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மோகனகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டார். இதில் நெற்றி, இடுப்பில் குண்டு பாய்ந்து மோகன கிருஷ்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

முன்னதாக மோகனகிருஷ்ணனையும், மனோகரனையும் போலீஸார் தனித் தனி வேனில் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையிலிருந்து கடத்தி வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட சிறுமி முஷ்கினை, கொலை செய்வதற்கு முன்பு கயவர்கள் இருவரும் கற்பழித்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியையும், அவளது தம்பியையும் கொலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியின் மகள் முஷ்கின். 11 வயது சிறுமி. அவளது தம்பி ரித்திக் ஜெயின், வயது 8. இருவரையும் மோகன் என்கிற மோகனகிருஷ்ணன் என்கிற கால் டாக்சி டிரைவர் தனது கால் டாக்சியில் கடத்திச் சென்று பி.ஏ.பி கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்த செயல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

சிறுமியின் உடல் நேற்று முன்தினம் பல்லடம் அருகிலும், சிறுவன் ரித்திக்கின் உடல் நேற்று பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோடு அருகே கால்வாயில் வைத்தும் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மோகனகிருஷ்ணனுக்கு உடந்தையாக இருந்த மனோகரன் என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு கயவர்களும், முஷ்கினையும், ரித்திக்கையும் கொலை செய்வதற்கு முன்பு, முஷ்கினை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறுகையில்,

கடந்த 29-ந் தேதி காலை 8 மணியளவில் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் குமார் ஜெயின் மகன் ரித்திக் (7) மற்றும் மகள் முஷ்கின் (11) ஆகியோரை கால் டாக்சி டிரைவர் மோகன் கடத்தி சென்றார்.

அவர் கோவையை அடுத்த உக்கடத்தை தாண்டியதும் திருமூர்த்தி மலையை சுற்றி காண்பிக்கிறேன் என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றார். இரு குழந்தைகளுக்கும் டிரைவர் மோகன் ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் அவர்கள் 2 பேரும் ஒன்றும் சொல்லாமல் டாக்சியிலேயே அமைதியாக இருந்து விட்டனர். டாக்சியின் டேப்ரிக்கார்டரில் பாட்டு போட்டதும் குழந்தைகள் இரண்டு பேரும் சிறிது நேரத்தில தூங்கி விட்டனர்.

மோகன் நேராக பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியில் உள்ள தனது நண்பர் மனோகரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மனோகரன் இல்லை.

வீட்டில் இருந்த மனோகரனின் தாயார் டாக்சியில் பள்ளி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளீர்களே. என்ன விஷயம்? என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன் சுற்றுலாவுக்காக அழைத்து வந்துள்ளேன் என்று கூறி விட்டு டாக்சியை எடுத்துக் கொண்டு கோவில்பாளையம் என்ற மலைப்பகுதிக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் ஒருமணி நேரம் கழித்து மீண்டும் மனோகரன் வீட்டுக்கு மோகன் சென்றார். அப்போது மனோகரன் வீட்டில் இருந்தார். உடனே அவரிடம் விஷயத்தை கூறியதும் மனோகரன் டாக்சியில் ஏறிக் கொண்டார்.

பின்னர் அவர்கள் இரண்டு பேரும் குழந்தைகளை கடத்திக் கொண்டு தளிக்கு சென்றனர். அங்கிருந்து குழந்தைகளின் பெற்றோருக்கு டெலிபோன் செய்து ரூ. 20 லட்சம் கேட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

அப்போது அவர்கள் இரண்டு பேரும் திடீரென மனம் மாறி சிறுமி முஷ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு உடன்படாததால் முஷ்கினை தாக்கியுள்ளனர். உடன் இருந்த சிறுவன் ரித்திக்கையும் அவர்கள் தாக்கினர். அதன் பின்னர் 2 பேரையும் பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர்.

இரண்டு பேரையும் கொன்ற பின்னர் மனோகரனை காட்டுப்பகுதியிலிருந்து அங்கலக்குறிச்சியில் கொண்டு போய் விட்டு விட்டு மோகன் மீண்டும் தோட்டத்தில் திரும்பி வந்து பதுங்கியிருந்தார். அங்கு முதலில் மோகன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மனோகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 363 (கடத்தல்), 364 ஏ (பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தல்), 302 (கொலை), 201 (தடயங்களை மறைத்தல்), 376 (பாலியல் பலாத்காரம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சைலேந்திரபாபு.

மீட்கப்பட்ட இரு குழந்தைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர் ஜெயின் மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு இருவரது உடல்களும் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஜெயின் சமூக மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவரும் கொடூர கொலைகாரர்களை விசாரணையே இல்லாமல் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டபடி வந்தனர்.

ஜெயின் சமூகத்தவர்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர், பல்வேறு அமைப்பினர், பள்ளி மாணவ, மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.